ஆப்நகரம்

பிப்.28 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தியேட்டர்களில் கூடுதல் இருக்கைகளுக்கு அனுமதி!

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது

Samayam Tamil 27 Jan 2021, 7:50 pm
கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் முடக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கான சேவையை தவிர அனைத்துவிதமான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வந்த பொது முடக்கத்தை வருகிற 31ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. அதேசமயம், UNLOCK நடைமுறையின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தை வருகிற பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவிப்பு


அதேசமயம், தற்போது அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்படி, திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் மேலான இருக்கைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கென புதிய நெறிமுறைகளை மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் விரைவில் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், விளையாட்டு வீரர்களுக்கு மட்டும் திறக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களை அனைவரது பயன்பாட்டுக்கும் திறந்து கொள்ளலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்மல்லாமல் பிற தேவைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், இதர நோயுடையவர்கள் வெளியே வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருப்பதி கோயில் சொத்துகள்: அதிரடி உத்தரவு பிறப்பித்த தேவஸ்தானம்!

பயணிகளின் சர்வதேச விமான சேவையை கூடுதல் வழித்தடங்களில் இயக்க, நிலைமையை கருத்தில் கொண்டு உள்துறை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து, விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி