ஆப்நகரம்

ஹிமாச்சலில் விளையும் வெளிநாடுகளுக்கு விற்கப்படும் மூலிகை வயக்ரா

ஹிமாசல பிரதேசத்தில் மலை உச்சியில் கிடைக்கும் அரிய வகை மூலிகை வயக்ரா வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அதிக அளவில் விற்கப்படுகிறது. இதற்கு அங்கு அதீத வரவேற்பு உண்டு. இதனை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.

Samayam Tamil 22 May 2019, 4:22 pm
ஹிமாசல பிரதேசத்தில் மலை உச்சியில் கிடைக்கும் அரிய வகை மூலிகை வயக்ரா வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அதிக அளவில் விற்கப்படுகிறது. இதற்கு அங்கு அதீத வரவேற்பு உண்டு. இதனை வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர்.
Samayam Tamil Capture


கோடை காலங்களில் ஹிமாசலின் பித்தோரகார் மாவட்டத்தில் உள்ள தர்சுலா மற்றும் முன்ஸ்யாரி கிராம மக்கள் சிலர் ரலாம் மலைப் பகுதிக்குச் செல்வர். அங்கு கிடைக்கும் கீடா ஜாடி என்ற அரியவகை மூலிகை வயக்ரா வெளிநாடுகளுக்கு அதிக அளவில் விற்கப்படுகிறது. இதனை எடுக்கவே மக்கள் அங்கு செல்கின்றனர். இதனால் அவர்கள் லாபம் ஈட்டுகின்றனர்.

அங்கு உள்ள ஓர் பசுமையான புல்வெளி இருக்கும் நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என் இரு கிராமத்தினர் சண்டையிட்டுக் கொண்டதால் செக்‌ஷன் 145 சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது.

கீடா ஜாடி வயக்ரா விளையும் ரலாம் புல்வெளிப் பகுதி, வான் பஞ்சாயத் பகுதிக்கு உட்பட்டது என ஒருதரப்பினர் வாக்குவாதம் செய்தனர். அங்கு கிடைக்கும் இந்த இமாலயன் வயக்ராவுக்காகவே இந்த நிலத்தை இரு கிராமத்தினரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.

இதனால் வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க செக்‌ஷன் 145 சட்டம் அங்கு அமல்படுத்தப்பட்டது.

அடுத்த செய்தி