ஆப்நகரம்

எல்லை தாண்டாமல் இருக்க மீனவர்களுக்கு புதிய கருவி: இஸ்ரோ சிவன்

எல்லை பிரச்னையிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 29 Jan 2018, 7:34 pm
எல்லை பிரச்னையிலிருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்கும் வகையில் புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil navig track app will be given to fisherman says isro sivan
எல்லை தாண்டாமல் இருக்க மீனவர்களுக்கு புதிய கருவி: இஸ்ரோ சிவன்


இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பதவியேற்றார். இந்நிலையில், நேற்று இவரது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவுக்கு வருகை புரிந்தார்.

அப்போது பேசிய சிவன், தமிழக மீனவர்கள் எல்லை பிரச்சனையிலிருந்து விடுபடும் நாவிக் (Navig) என்ற புதிய கருவி தயாரிக்கப்பட்டு வருவதாகவும் வகையில் இதன் மூலம் மீனவர்கள் தாங்கள் கடந்து கொண்டிருக்கும் பாதை, வானிலை மாற்றங்கள் போன்றவற்றை அறிய முடியும் என்று தெரிவித்தார்.

மேலும், வரும் மாதங்களில் ஜி-சேட் 11 செயற்கைகோள் விண்ணில் செலுத்த உள்ளதாகவும், இதன்மூலம் நோயாளிக்கு தொலைவிலிருந்து மருத்துவம் பார்க்க முடியும் என்றும், தொலைதூர கல்வி பயிலவும் முடியும் என்று கூறினார்.

அடுத்த செய்தி