பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்கட்சியை சேர்ந்த கேப்டன் அமரீந்தர் சிங் முதல்வராக இருக்கிறார். அடுத்த ஆண்டு அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சித்து போர்க்கொடி தூக்கினார். இதையடுத்து, மூன்று பேர் அடங்கிய குழு ஒன்றை சோனியா அமைத்தார். அக்குழுவினர், மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், முதல்வர் அமரீந்தர் சிங், சித்து ஆகியோரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தனர்.
அதன்பின்னர், அமரீந்தர், சித்து ஆகிய இருவரும் டெல்லி சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து பேசினர். பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அல்லது அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை குறித்து வைத்து சித்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வரும் குழப்பம் தொடர்பாக “முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் தலைவரா? பஞ்சாப் அரசியலில் சிக்ஸர் சித்து ஆடும் கிரிக்கெட்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கட்சிக்கு இரண்டு செயல் தலைவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வர் பதவியில் அமரீந்தர் சிங் நீடிப்பார் என்றும் தெரிகிறது. “அமரீந்தர் சிங் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்போம். இரு தலைவர்களும் இணைந்து செயல்படுவார்கள். மேலிட முடிவுக்கு அமரீந்தர் சிங் கட்டுப்படுவார்” என்று கட்சியின் மேலிட பார்வையாளர் ஹாரீஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பதவியை சித்துவுக்கு வழங்க தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சீனியர்கள் பலர் இருக்கும்போது, சித்துவை காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தினார் சரியாக இருக்காது என்பது அமரீந்தர் சிங் முகாமில் இருக்கும் தலைவர்களின் கருத்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர், அமரீந்தர், சித்து ஆகிய இருவரும் டெல்லி சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரை சந்தித்து பேசினர். பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் அல்லது அம்மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை குறித்து வைத்து சித்து காய்களை நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் காங்கிரஸில் நிலவி வரும் குழப்பம் தொடர்பாக “முதல்வர் வேட்பாளரா? காங்கிரஸ் தலைவரா? பஞ்சாப் அரசியலில் சிக்ஸர் சித்து ஆடும் கிரிக்கெட்!” என்ற தலைப்பில் சமயம் தமிழில் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை நியமிக்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கட்சிக்கு இரண்டு செயல் தலைவர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வர் பதவியில் அமரீந்தர் சிங் நீடிப்பார் என்றும் தெரிகிறது. “அமரீந்தர் சிங் தலைமையில் சட்டசபை தேர்தலை சந்திப்போம். இரு தலைவர்களும் இணைந்து செயல்படுவார்கள். மேலிட முடிவுக்கு அமரீந்தர் சிங் கட்டுப்படுவார்” என்று கட்சியின் மேலிட பார்வையாளர் ஹாரீஸ் ராவத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் பதவியை சித்துவுக்கு வழங்க தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சீனியர்கள் பலர் இருக்கும்போது, சித்துவை காங்கிரஸ் தலைவர் பதவியில் அமர்த்தினார் சரியாக இருக்காது என்பது அமரீந்தர் சிங் முகாமில் இருக்கும் தலைவர்களின் கருத்தாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.