ஆப்நகரம்

சுக்மா நக்ஸல் தாக்குதல்: தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய வெறித்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

TNN 25 Apr 2017, 1:41 am
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நிகழ்த்திய வெறித்தனமான தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களில் மூவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
Samayam Tamil naxal attack 3 tamil soldiers martyred
சுக்மா நக்ஸல் தாக்குதல்: தமிழக வீரர்கள் 3 பேர் வீரமரணம்


சத்தீஸ்கர் மாநிலம் சிக்மா மாவட்டத்தின் தெற்கு பகுதி மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேற்று நண்பகல் சுமார் 12.25 மணியளவில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 74-வது பட்டாலியன் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள், வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப் படை வீரர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். திடீரென நடைபெற்ற இந்த தாக்குதலில் சிக்கி பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள் 25 பேரின் அடையாளம் காணப்பட்டு தற்போது அந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Drenching roots of the nation with their blood 25 heroes inspired by the motto of #NationFirst made supreme devotion to our motherland. pic.twitter.com/5To465Vdz4 — CRPF (@crpfindia) April 24, 2017 வீரமரணம் அடைந்த அந்த வீரர்களின் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் செந்தில்குமார், அழகுபாண்டி, திருமுருகன் உள்ளிட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Naxal attack: 3 tamil soldiers martyred

அடுத்த செய்தி