ஆப்நகரம்

நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவராகிறார் வெங்கய்ய நாயுடு...!

இன்று நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார்.

TNN 5 Aug 2017, 7:17 pm
டெல்லி: இன்று நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெங்கய்ய நாயுடு வெற்றி பெற்றார்.
Samayam Tamil ndas candidate venkaiahnaidu wins vicepresidentialelections
நாட்டின் 15வது குடியரசுத் துணைத் தலைவராகிறார் வெங்கய்ய நாயுடு...!


எம்.பிக்கள் மட்டும் வாக்களித்த குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் முதன்மை வேட்பாளர்களாக ஆளும் பாஜக கூட்டணி சார்பில் வெங்கய்ய நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் கோபால கிருஷ்ண காந்தியும் நிறுத்தப்பட்டனர்.

இந்த தேர்தலில் வாக்களிக்க மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 787 எம்.பிக்கள் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 760 வாக்குகளில் பதிவாகின. இதில் 11 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் 98.21% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் வெங்கய்ய நாயுடு 516 வாக்குகளும், கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகளும் பெற்றனர். தற்போது குடியரசுத் துணைத் தலைவராக உள்ள ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

NDA's candidate #VenkaiahNaidu wins #VicePresidentialElections, defeating Gopalkrishna Gandhi.

அடுத்த செய்தி