ஆப்நகரம்

மகாராஷ்டிராவில் 17 லட்சம் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்; ஸ்தம்பித்த மாநிலம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் 3 நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Samayam Tamil 7 Aug 2018, 2:26 pm
மும்பை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் 3 நாட்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Samayam Tamil Govt Emp Strike


மகாராஷ்டிர மாநிலத்தில் அரசு ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. இவர்களின் பெரும்பாலானோர் கிளாஸ் 3 மற்றும் கிளாஸ் 4 ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

7வது ஊதியக் குழு நடைமுறை உட்பட 24 கோரிக்கைகளை ஊழியர்கள் முன்வைத்துள்ளனர். அதில் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60ஆக உயர்த்துவது, 5 நாட்கள் வேலைநாள், 1.80 லட்சம் காலியிடங்களை நிரப்புதல், பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுமுறையை 2 ஆண்டுகளாக நீட்டித்தல், கால வரம்புக்கு பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 19 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றி வரும் சூழலில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் 17 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். அரசு ஊழியர்களின் போராட்டத்தால் அரசு அலுவலகங்கள், நகராட்சி கவுன்சில், பள்ளிகள், மருத்துவமனைகளில் பணிகள் முடங்கின.

அரசின் கீழ் இயங்கும் மும்பை ஜே ஜே மருத்துவமனை ஊழியர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இங்கு மருத்துவ ஆசிரியர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், பிபிஎம்டி மாணவர்கள், நர்சிங் மாணவர்கள் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

Nearly 17 lakh Maharashtra state government employees on 3-day strike from today.

அடுத்த செய்தி