ஆப்நகரம்

புதிதாக தேர்வான பாதி எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு; அதிரவைக்கும் ரிப்போர்ட்!

புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

Samayam Tamil 29 May 2019, 7:41 am
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதனுடன் 147 உறுப்பினர்கள் கொண்ட ஒடிசா மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 112 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
Samayam Tamil Odisha Assembly


இந்நிலையில் தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர்கள் அளித்த பிரமாண வாக்குமூலத்தின் மூலம் குற்றப் பின்னணி விவரங்கள் தெரியவந்துள்ளது. இதனை ’ஒடிசா எலக்‌ஷன் வாட்ச்’என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அவர்களின் 46 எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதிலும் 36 எம்.எல்.ஏக்கள் மீது கொலை, கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் அம்மாநிலத்தில் வெற்றி பெற்ற 33 பாஜக எம்.எல்.ஏக்களில் 14 பேர் மீது குற்ற வழக்குகள் இருக்கின்றனர். அதிலும் 10 பேர் கொலை, கடத்தல் போன்ற கடுமையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 6 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

அடுத்த செய்தி