ஆப்நகரம்

இன்னும் அதிகமா லோன் தாங்க.... வங்கிகளுக்கு நிதியமைச்சர் அட்வைஸ்

பொதுமக்களுக்கு தேவையான வீட்டு கடன், விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை பொதுத் துறை வங்கிகள் கண்டறிந்து அவற்றை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 19 Sep 2019, 10:28 pm
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளின் உயரதிகாரிகளுடன் டெல்லியில் இன்று விரிவான ஆவோசனை நடத்தினார். அப்போது பொதுத் துறை வங்கிகள் இணைப்பு, கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு, பல்வேறு கடன்களை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Samayam Tamil fmns.


முக்கியமாக, கடந்த இரு நிதியாண்டுகளில் வழங்கப்பட்டுள்ள வீட்டு வசதி கடன், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கான கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

அ்ப்போது, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 2017 -18 -ஆம் நிதியாண்டில் மொத்தம் 8.53 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதுவே, கடந்த நிதியாண்டில் (2018 -19) 11.83 லட்சம் கோடி ரூபாய் அவற்றுக்கு கடனாக அளிக்கப்பட்டுள்ளது. என பொதுத் துறை வங்கிகளின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேபோன்று, 2017 -18 நிதியாண்டில் வீட்டு கடன் 1.81 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில் கடந்த நிதியாண்டில் 2.19 லட்சம் கோடி ரூபாய் கடனாக அளிக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, "நாட்டின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, உற்பத்தி துறை, உள்கட்டமைப்பு துறை உள்ளிட்ட முக்கியமான துறைகளுக்கு தேவையான கடன்களை அளித்து வங்கிகள் அவற்றின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடனை தொடர்ந்து அளித்திட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான வீட்டு வசதி கடன், விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை தாராளமாக அளித்திடும் வகையில், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுடன் இணைந்து, நாடு முழுவதும் மொத்தம் 400 மாவட்டங்களில் கடன் வழங்கும் முகாம்களை (லோன் மேளா) பொதுத் துறை வங்கிகள் விரைவில் நடத்திட வேண்டும்.

பொதுத் துறை வங்கிகளின் இணைப்பால், அவற்றின் பணியாளர்களின் வேலைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நிதியமைச்சர் உறுதியளித்தார்.

அடுத்த செய்தி