ஆப்நகரம்

நேபாளம் அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து!

டெல்லி வந்துள்ள நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

TNN 18 Apr 2017, 10:53 am
டெல்லி வந்துள்ள நேபாளம் நாட்டு அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Samayam Tamil nepal president receives ceremonial reception at rashtrapati bhawan
நேபாளம் அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து!


முன்னதாக, அவரை பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். இதன்பின், டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில், பண்டாரிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

நேபாளம் அதிபரை கவுரவிக்கும் வகையில், சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியே வழங்குகிறார். இதில் பங்கேற்க, துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

5 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பித்யா தேவி பண்டாரி, பல்வேறு வர்த்தக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். அத்துடன், பிரதமர் மோடி மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் வர்த்தக ஒப்பந்தங்களிலும் அவர் கையெழுத்திட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Nepal President Bidya Devi Bhandari on Tuesday received ceremonial reception at the Rashtrapati Bhawan here.

அடுத்த செய்தி