ஆப்நகரம்

உச்சகட்ட அதிகார மோதல்; நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் பரிந்துரை!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த சூழலில் அவையை கலைக்க குடியரசுத் தலைவரிடம் பிரதமர் பரிந்துரை செய்துள்ளார்.

Samayam Tamil 20 Dec 2020, 2:04 pm
நேபாள நாட்டின் பிரதமராக கே.பி ஷர்மா ஒலி (68) பதவி வகித்து வருகிறார். இவரது அரசு கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் மூன்று முக்கிய பிரதேசங்களை உள்ளடக்கிய வரைபடத்தை வெளியிட்டது. இது இந்திய - நேபாள உறவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை பிரதமர் தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார். இதனை அவரது கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதில் முன்னாள் பிரதமர் பிரசண்டாவும் ஒருவர். ஒருகட்டத்தில் மோதல் போக்கு விஸ்வரூபம் எடுக்க பிரதமர் ஷர்மா ஒலி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை வலுக்கத் தொடங்கியது.
Samayam Tamil K. P. Sharma Oli


கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்தது. நாடாளுமன்றத்தில் தனக்கான ஆதரவையும் இழந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவசர அவசரமாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டினார். அதில் அதிருப்தி தலைவர்களை பிரதமர் ஒலி சமாதானம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரதமர்; செம ஸ்பீடா நடக்கும் வேலைகள்!

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது ஆளுங்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரிக்கு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தை பிரதமர் ஷர்மா ஒலி அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கு முன்னாள் பிரதமர் பிரசண்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சூழலில் எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவசர கூட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்குமோ என நேபாளத்தின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

யாரு யாரை ஏமாத்தினாங்கன்னு கொஞ்ச நாள்ல தெரியும்: சூரி பற்றி விஷ்ணு விஷால்

நேபாள நாடாளுமன்றத்திற்கு அடுத்த தேர்தல் வரும் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்றத்தை கலைக்கும் பரிந்துரையை குடியரசுத் தலைவர் ஏற்றால் முன்கூட்டியே தேர்தல் வரும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி