ஆப்நகரம்

வழக்கு விவரங்களை தெரிந்துகொள்ள புதிய ஆப் அறிமுகம்.!

வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார்.

TNN 29 Oct 2017, 11:56 am
வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதி, மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil new app introduced by supreme court judge
வழக்கு விவரங்களை தெரிந்துகொள்ள புதிய ஆப் அறிமுகம்.!


டிஜிட்டல் ஆப்.!
நாடு முழுவதும் வழக்கு ஆவணங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில், டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதனையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர், இந்த மையத்தை திறந்து வைத்தார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதேபோன்று சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

புதிய செயலி பயன்பாடு.!
ஆவணங்களை ஸ்கேன் செய்து சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் ஆவணங்களை எளிதாக பெற முடியும். கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
அதேபோன்று இ–மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளனர். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.

விரைவில் தீர்ப்பு.!
தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில் ஏற்கனவே 4 ஐகோர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வழக்கு விவரங்களை உடனுக்குடன் பெற முடியும். அடுத்த 10 நாட்களில் மேலும் 10 ஐகோர்ட்டுகள் இதில் இணைக்கப்படும். நீதி கிடைப்பதில் தாமதம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். மின்னனு மயமாக்கப்படுவதால் இன்னும் 2 மாதங்களில் இதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.

கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் விரைந்து முடிக்க முடியும். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பொதுவாக சமரச தீர்வு 60 நாட்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் புதுடெல்லியில் ஏராளமான வழக்குகள் 30 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளன.

New app introduced by supreme court judge.

அடுத்த செய்தி