ஆப்நகரம்

புகாா் அளிக்க காவல் நிலையம் செல்ல வேண்டாம்: புதிய செயலி அறிமுகம்

கேரளாவில் மக்களின் வசதிக்காக வீட்டில் இருந்தபடியே காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும் வகையில் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளாா் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன்.

Samayam Tamil 12 May 2018, 4:09 pm
கேரளாவில் மக்களின் வசதிக்காக வீட்டில் இருந்தபடியே காவல் நிலையத்தில் புகாா் அளிக்கும் வகையில் புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளாா் அம்மாநில முதல்வா் பினராயி விஜயன்.
Samayam Tamil Mobile.


டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னிருத்தில் பல்வேறு துறைகளும் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் காவல் நிலையத்திற்கு சென்று புகாா் அளிக்கும் முறைதான் தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

மேலும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகும் பெண்கள் பெரும்பாலானோர் காவல் நிலையத்திற்கு சென்று புகாா் தொிவிப்பதை பலரும் விரும்புவதில்லை. இதனால் பல குற்ற சம்பவங்கள் பதிவு செய்யப்படாமலேயே விடப்படுகிறது.

இதனை தவிா்க்கும் முயற்சியில் கேரள முதல்வா் பினராயி விஜயன் புதிய செல்போன் செயலி ஒன்றை அறிமுகம் செய்து வைத்துள்ளாா். அதன் படி “சிட்டிசன் சேப்டி” ‘Citizen Safety’ என்ற செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி