மாநில அரசுகளின் பரிந்துரைகளை பெற்றபின், புதிய கல்விக்கொள்கை குறித்து முடிவு செய்யப்படும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
கடந்த 1986ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிக் காந்தியின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்த புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன்பின் வந்த அரசுகள், அதில் திருத்தங்கள் மட்டுமே செய்துவந்தன.
இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரவை செயலர் டிஎஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிட்டி சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதுபற்றி தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பலரிடமும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரை கேட்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்துள்ளதாகவும், விரைவில் இதுபற்றி மாநில அரசுகளுடனும் கலந்து ஆலோசித்து, இறுதியாக, அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1986ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜிக் காந்தியின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பள்ளி மற்றும் உயர்கல்வி குறித்த புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டது. அதன்பின் வந்த அரசுகள், அதில் திருத்தங்கள் மட்டுமே செய்துவந்தன.
இந்நிலையில், தற்போதைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, முன்னாள் மத்திய அமைச்சரவை செயலர் டிஎஸ்ஆர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. இந்த கமிட்டி சமீபத்தில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதுபற்றி தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கருத்து தெரிவித்துள்ளார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் உள்பட பலரிடமும் ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பரிந்துரை கேட்கப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்துள்ளதாகவும், விரைவில் இதுபற்றி மாநில அரசுகளுடனும் கலந்து ஆலோசித்து, இறுதியாக, அறிவிப்பு வெளியிடப்படும் என்றும், ஸ்மிருதி இரானி குறிப்பிட்டுள்ளார்.