ஆப்நகரம்

பதவியேற்ற 24 மணிநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் கோவா முதல்வர்

கோவா: மனோகர் பாரிக்கர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுள்ள நிலையில் இன்று அம்மாநில சட்டமன்ற்த்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார்.

Samayam Tamil 20 Mar 2019, 8:38 am
கோவா முதலைமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்ற நிலையில், அவர் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று காலை 11.30 மணியவைல் நடைபெறவுள்ளது.
Samayam Tamil இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார் புதிய கோவா முதல்வர்


40 உறுப்பினர்கள் கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜக 12, காங்கிரஸ் 15 உறுப்பினர்கள் இருக்கின்றனர். கோவா பார்வர்டு கட்சி 3, எம்.ஜி.பி 3, சுயேட்சைகள் 3 பேர் உள்ளனர். மேற்கூறிய சிறிய கட்சிகளின் 9 உறுப்பினர்கள் உடன் கூட்டணி சேர்ந்து, மொத்தம் 21 உறுப்பினர்கள் உடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது.

இந்நிலையில் கோவா மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். இவர் உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். கடந்த திங்களன்று அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற 19 இடங்களில், 2 உறுப்பினர்கள் மறைவால் காலியானது. மேலும் 2 உறுப்பினர்கள் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் தனிப்பெரும் கட்சியாக இருக்கும் தங்களுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என்று ஆளுநர் மிருதுளா சின்ஹாவிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. இதனால் கோவா மாநிலத்தில் அரசியல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில் கோவா மாநிலத்தின் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் நேற்று அதிகாலை பதவியேற்றார். இதற்கு கூட்டணி கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி, கோவா பார்வர்டு கட்சி உள்ளிட்டவை சம்மதம் தெரிவித்தன.

இந்நிலையில், கோவா ஆளுநர் சின்ஹா உத்தரவுப்படி இன்று காலை நடைபெறும் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்கிறார். இதில் நிச்சயம் பாஜக கட்சி கோவாவில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என பிரமோத் சாவந்த் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி