ஆப்நகரம்

இந்திய கடலோர பாதுகப்பு படைக்கு புதிய ரோந்துகப்பல்!

இந்திய கடலோர பாதுகாப்பு படையில் விஜயா என்ற புதிய ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Sep 2018, 11:37 am
இந்திய கடலோர பாதுகாப்பு படையில் விஜயா என்ற புதிய ரோந்து கப்பல் இணைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil vaa


போதைப்பொருள் கடத்தல்,ஆயுதங்கள் கடத்தல்,ஊடுருவல் போன்ற குற்றங்களை தடுப்பதற்காகஇந்திய கடலோர பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது.இதற்காக ஆயுதங்கள் தாங்கிய பிரத்யேக கப்பல்களை இந்திய கடலோர பாதுகாப்பு படை கொண்டுள்ளது.அந்த வரிசையில் 98 மீட்டர் நீளம் கொண்ட விஜயா என்ற கப்பல் இந்திய கடலோர பாதுகாப்பு படையில் பணியில் இணைக்கப்பட்டது.

சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தவிழாவில் இந்திய பாதுகாப்புதுறை செயலாளர் சஞ்சய் மித்ரா, இந்திய கடலோர பாதுகாப்பு படையின் தென்பகுதி இயக்குநர் ஜெனரல் ராஜேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.விஜயா என்பதற்கு வெற்றிஎன்றுஅர்த்தமாகும்.

இந்த கப்பலை லார்சன் மற்றும் டியூப்ரோ கம்பெனி நிர்மாணித்து உள்ளது.இதில் முழுக்க நவீன கண்காணிப்பு உபகரணங்கள்பொருத்தப்பட்டுள்ளன.நவீன துப்பாக்கிள், தானியங்கி மின்சார மேலாண்மை, உயர் அழுத்த தீயணைப்பு கருவிகள், ஒரு ஹெலிக்காப்டர் மற்றும் 4அதிவேக படகுகளை ஏந்திசெல்லும் வசதி உடையதாக விஜயா கப்பலில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால் அதைநீக்கும் கருவிகளை கொண்டு செல்லும் வசதியும் விஜயா கப்பலில் உள்ளது. இந்த கப்பல் அதிகபட்சமாக 26 கடல் மைல் வேகத்தில் செல்லும், விஜயா கப்பலை ஹரிந்தர்ஜித் சிங் நிர்வகிப்பார்.12 அதிகாரிகளும், 91 வீரர்களும் அதில் பணியாற்றுவார்கள்

இந்திய கடலோர பாதுகாப்புபடையில் தற்போது137கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன, 61 கப்பல்கள் கட்டப்பட்டுவருகின்றனர் என்று அதிகாரிகள்தெரிவித்தனர்.

அடுத்த செய்தி