ஆப்நகரம்

காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல்

எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போலி ரூபாய் நோட்டுக்களா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TNN 22 Nov 2016, 1:16 pm
காஷ்மீர்: எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து, புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது போலி ரூபாய் நோட்டுக்களா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil new rs 2000 notes recovered from terrorists gunned down by army in bandipora
காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து புதிய ரூ.2000 நோட்டுக்கள் பறிமுதல்


ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபூராவில் இன்று காலை தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

New Rs 2000 notes recovered from terrorists gunned down by Army in Bandipora(J&K) today. pic.twitter.com/l9y1xqyoem — ANI (@ANI_news) November 22, 2016 இந்நிலையில் அவர்களிடம் இருந்து, புதிய ரூ.2000 நோட்டுக்களும், ஏராளமான ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த நோட்டுக்கள் போலி நோட்டுக்களா என்று காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவரில் ஐ.எஸ்.ஐ கண்காணிப்பில் போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் அச்சகம் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தீவிரவாதத்தை வேரூன்ற சென்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரகசிய தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

New Rs 2000 notes recovered from terrorists gunned down by Army in Bandipora(J&K) today.

அடுத்த செய்தி