ஆப்நகரம்

அரபிக்கடலில் உருவாகும் மேகுனு புயல்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!

அரபிக்கடலில் உருவாகும் மேகுனு எனும் புதிய புயலால் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 21 May 2018, 1:00 pm
அரபிக்கடலில் உருவாகும் மேகுனு எனும் புதிய புயலால் தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக மீனவர்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil storm
அரபிக்கடலில் உருவாகும் மேகுனு புயல்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!


அரபிக்கடலில், மே, 16ல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, புயலாக மாறியது. ‘சாகர்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகதமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு இந்திய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஆனால் இந்த புயல், இந்தியாவிற்குள் நுழையமால், எதிர் திசையில் சென்று ஏமன் மற்றும் சோமாலியாவுக்கு மத்தியில் உள்ள ஏடன் வளைகுடாவில் மையம் கொண்டது. அதன் பிறகு கடந்த 19-ந்தேதி சோமாலியாவில் புயல் கரையை கடந்தது.

இந்த நிலையில், அரபிக்கடலில் சாகர் புயல் உருவான அதே இடத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்றும், இன்னும் மூன்று நாட்களில், தெற்கு ஓமன் மற்றும் வடக்கு ஏமனை நோக்கி செல்லும் என, இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இந்த புதிய புயலுக்கு மாலத்தீவு நாட்டின் சார்பில் ‘மேகுனு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் இந்தியாவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், அதே சமயம் அரபிக்கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதனால் தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த மீனவர்கள் வருகிற 23-ந்தேதி வரை தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே சமயம் மேகுனு புயலால் தமிழகத்திற்கு மழை வாய்ப்புகள் இல்லை என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி