ஆப்நகரம்

ராஞ்சியில் புதிய ரயில் பெட்டிகள் திருட்டு!

ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் இருந்து ராஜ்தானி மற்றும் சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய பெட்டிகள் காணமால் போயிருக்கின்றன.

Samayam Tamil 7 Jun 2018, 12:14 pm
ராஞ்சி ரயில்வே மண்டலத்தில் இருந்து ராஜ்தானி மற்றும் சம்பார்க் கிரந்தி எக்ஸ்பிரஸ் ரயில்களின் புதிய பெட்டிகள் காணமால் போயிருக்கின்றன.
Samayam Tamil maxresdefault-4-1


இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, அவை திருடப்பட்டு எங்கே போயிருக்கும் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும், ஏதேனும் கொள்ளைக் கும்பல் திட்டமிட்டு இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர்.

காணாமல் போன பெட்டிகளுக்குப் பதிலாக பழைய பெட்டிகளை அந்த ரயில்களில் இணைத்து ரயிலை இயக்குவதாகவும் இதனால் பயணிகளிடமிருந்து ஏராளமான புகார்கள் குவிகின்றன என்றும் தகவல் கிடைத்துள்ளது.

அண்மையில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்று பெட்டிகள் பழுதானதால் அது ராஞ்சியிலிருந்து தாமதமாகப் புறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தியது நினைவூட்டத்தக்கது.

அடுத்த செய்தி