ஆப்நகரம்

திருப்பதியில் சிறப்பு தரிசனம் ரத்து: பக்தர்கள் ஏமாற்றம்!

திருப்பதியில் புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடப்பாண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 31 Dec 2020, 6:08 pm
நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கவுள்ளது. வழக்கமாக ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் ஹோட்டல்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கொண்டாட்டங்களும், கோயில்களில் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகளும் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மரபனு மாற்றம் பெற்ற கொரோனா பரவி வருவதால் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொறுத்தவரை புத்தாண்டு தினத்தன்று சிறப்பு தரிசனம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அன்றைய தினம் ஏழுமலையானை தரிசித்து வந்தனர். கொரோனா காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட திருப்பதி கோயிலில் தற்போது பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நாள் ஒன்றுக்கு 30,000 பக்தர்களே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு தரிசனம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மத்தியில் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக, புத்தாண்டுக்காக சிறப்பு தரிசன ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. வழக்கமான தரிசனம் மட்டுமே நடைபெறும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

திருப்பதிக்கு இவர்கள் வர வேண்டாம்: டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடக்கம்!

முன்னதாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புத்தாண்டை யொட்டி சிறப்பு அலங்காரம் மற்றும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டிற்கு திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி