ஆப்நகரம்

அயோத்தியில் அடுத்த தீபாவளிக்குள் ராமா் கோவில் கட்டப்படும் – சுப்பிரமணியன் சுவாமி

அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமா் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொிவித்துள்ளாா்.

TOI Contributor 3 Dec 2017, 3:16 pm
அடுத்த தீபாவளிக்குள் அயோத்தியில் ராமா் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று பா.ஜ.க. மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொிவித்துள்ளாா்.
Samayam Tamil next diwali will be celebrated in newly built ram temple in ayodhya swamy
அயோத்தியில் அடுத்த தீபாவளிக்குள் ராமா் கோவில் கட்டப்படும் – சுப்பிரமணியன் சுவாமி


ராமஜென்ம பூமி – பாபா் மசூதி வழக்கில் வருகிற 5ம் தேதி முதல் தினமும் வசாரணை நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து தீா்ப்பு வெளியாக உள்ளது. இதற்கிடையே பா.ஜ.க.வின் மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி மும்பையில் செய்தியாளா்களிடம் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், அயோத்தில் புதிதாக கட்டப்படும் ராமா் கோவிலில் அடுத்த தீபாவளியை பக்தா்கள் கொண்டாடலாம்.

அதற்கான அனைத்து வேலைகளும் தயாராகிவிட்டன. சுவாமி நாராயண் கோவிலை போன்ற உள்கட்டமைப்புகளை பொருத்தினால் கோவில் தயாராகிவிடும் என்றாா்.

கோவில் கட்டுவதற்காக புதிய சட்டத்தைக் கொண்டுவர முடியும் என்றாலும் வழக்கில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி