ஆப்நகரம்

அடுத்த 3 மாதங்கள்: தாங்க முடியாத வானிலை மாற்றம் வரப் போகுது - பொதுமக்களே உஷார்!

வானிலையில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்படப் போகின்றன என்று விரிவாக காணலாம்.

Samayam Tamil 30 Nov 2020, 11:17 am
இந்தியா முழுவதும் குளிர்காலத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கியத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மூன்று மாதங்களில் கடுங்குளிர் நீடிக்கும். குறிப்பாக வடக்கு, வடமேற்கு, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியாவின் ஒருசில பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வழக்கத்தை விட அதிக குளிர் காணப்படும். மேலும் வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகள், தென் தீபகற்ப இந்தியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட சற்றே அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
Samayam Tamil India Weather


அதாவது இப்பகுதிகளில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரின் அளவு குறைவாக இருக்கும். எனவே பகல் நேரங்களில் அதிக வெப்பநிலையுடன் காணப்படாது. இதுதொடர்பாக பருவகால வானிலை மாதிரி மூலம் ஆய்வு செய்ததில் பல்வேறு கணிப்புகள் கிடைத்துள்ளன.

இது கடந்த 2003 முதல் 2018 வரையிலான 16 ஆண்டுகால வானிலை மாற்றங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி டெல்லி, சண்டிகர், ஹரியானா, கிழக்கு ராஜஸ்தானில் இயல்பை விட 0.41 முதல் 0.52 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைந்து காணப்படும்.

வந்துருச்சு மீண்டும் ஊரடங்கு; எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

இதற்கு 60 முதல் 70 சதவீத அளவிற்கு வாய்ப்பிருக்கிறது. மேற்கு ராஜஸ்தானில் இயல்பை விட 1.17 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கக்கூடும். இதற்கு 100 சதவீத வாய்ப்பிருக்கிறது.

இதேபோல் பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பிகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய பகுதிகளில் 0.57 முதல் 1 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிக வெப்பநிலை நிலவும். இதற்கு 70 முதல் 100 சதவீதம் வாய்ப்புள்ளது. இதன்மூலம் இப்பகுதிகளில் வானம் மிகத் தெளிவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி