ஆப்நகரம்

கோரக்பூர் துயரம் பற்றி உ.பி. அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தது பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 14 Aug 2017, 4:32 pm
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தது பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil nhrc sends notice to the government of uttar pradesh over gorakhpur tragedy
கோரக்பூர் துயரம் பற்றி உ.பி. அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்


உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த பிஞ்சுக் குழந்தைகள் இறப்புக்குக் காரணம் மருத்துவமனையில் சிகிச்சைக்குத் தேவையான திரவ ஆக்சிஜன் இல்லாததே என்று தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணைக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இத்துயரச் சம்பவத்திற்கு அம்மாநில அரசின் அலட்சியமே காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இச்சூழலில், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 70க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளது பற்றி விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அடுத்த செய்தி