ஆப்நகரம்

மோடியைக் கொல்லுங்கள்; என்.ஐ.ஏ.வுக்கு வந்த இமெயிலால் அதிர்ச்சி!

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு வந்துள்ள இமெயிலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Samayam Tamil 3 Sep 2020, 8:05 pm
பிரதமர் மோடியின் தனிப்பட்ட இணையதளத்திற்கான @narendramodi_in என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த ட்விட்டர் கணக்கை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பிரதமர் மோடி
பிரதமர் மோடி


இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாக, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இமெயில் ஒன்று அனுப்பப்பட்டுள்ள விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட இமெயிலின் நகல் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி இரவு 1.34 மணிக்கு என்.ஐ.ஏ.வின் மும்பை அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு, ylalwani12345@gmail.com என்ற முகவரியில் இருந்து “நரேந்திர மோடியை கொல்லுங்கள் (Kill Narendra Modi)” என்று மிரட்டல் விடுக்கும் இமெயில் அனுப்பப்பட்டுள்ளது.

மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் - ஹேக்கர்கள் பதிவிட்ட அந்த ட்விட்டால் அதிர்ச்சி!

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், இமெயிலில் இடம் பெற்றிருக்கும் விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் எஸ்பிஜி பாதுகாப்பு படையினருக்கும் இது குறித்து எச்சரிக்கை விடுத்து பிரதமரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் வருவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் இதேபோன்று பல்வேறு காலகட்டங்களில் அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. தற்போது வந்துள்ள மிரட்டல் இமெயில் முற்றிலும் போலி இமெயில் முகவரி என்று தெரிய வந்தாலும், உயர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி