ஆப்நகரம்

புதுசா போட்டுத் தாக்கும் கொரோனா; லே பகுதியில் இப்படியொரு ஊரடங்கு!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Nov 2020, 4:21 pm
லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள மிகப்பெரிய நகரமான லே-வில் புதிதாக 44 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 8,272ஆக அதிகரித்துள்ளது. புதிதாக ஒருவர் பலியானதன் மூலம் உயிரிழப்புகள் 114ஆக உயர்ந்துள்ளன. தொடர்ந்து ஆறாவது நாளாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாகவே கோவிட்-19 பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து கொண்டிருக்கிறது.
Samayam Tamil Leh Curfew


இதையொட்டி லே மாவட்ட மேஜிஸ்டிரேட் சச்சின் குமார் வைஷ்யா, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏதுமில்லை.

அவசர தேவைகளுக்கு மாவட்ட மேஜிஸ்டிரேட்டின் அனுமதி பெற்று செல்லலாம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் கோவிட்-19 வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்ற வேண்டும். மாவட்டத்தின் எந்தவொரு பகுதியிலும் நான்கு பேருக்கு மேல் பொதுமக்கள் ஒன்று சேரக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடிச்சுது ஜாக்பாட்; தங்கத்தை வாரிக் கொடுத்த நிவர் புயல்; அள்ளிச் சென்ற மக்கள்!

மேலும் திருமணம், இறுதிச் சடங்கு போன்றவற்றில் யூனியன் பிரதேச அரசு பரிந்துரை செய்துள்ள எண்ணிக்கையில் தான் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் 50 சதவீத ஊழியர்கள் மட்டும் வேலை செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு இன்று (நவம்பர் 28) இன்று முதல் அமலுக்கு வருகிறது. மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி