ஆப்நகரம்

ஹிமாச்சலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசம் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் பரிதாபமாக பலியாகினர்.

PTI 8 May 2016, 10:42 am
சிம்லா: ஹிமாச்சல் பிரதேசம் அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக பலியாகினர்.
Samayam Tamil nine killed 36 injured in himachal bus accident
ஹிமாச்சலில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி


மண்டி மாவட்டத்தின் ஜோகிந்தர்நகர் பகுதி அருகே அரசு பேருந்து விபத்துக்குள்ளனத்தில் 39 பேர் படுகாயம் அடைந்தனர். 55 பயணிகளை ஏற்றி வந்த பேருந்து ரெகொங் பியோவில் இருந்து புறப்பட்டு சுமார் 210கி.மீ தொலைவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்விபத்தில் பலியான 14 பேரில் 8 பேரின் உடல் பேருந்து இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டது. 39 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறபபடுகிறது.

அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள சண்டிகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழந்தவர்கள் குறித்து தகவல் அறியப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி