ஆப்நகரம்

ஆந்திரா கோர விபத்து: லாரி- டிராக்டர் மோதியதில் 2 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி..!

ஆந்திரா அருகே டிராக்டரும், லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 9 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Jun 2020, 6:05 pm
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கோபவரம் கிராமத்தைச் சேர்ந்த 25 பேர் இன்று அருகிலுள்ள லட்சுமினரசிம சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்காக ஒரு டிராக்டரில் சென்றனர்.
Samayam Tamil ஆந்திரா லாரி- டிராக்டர் விபத்து


அப்போது எதிரே சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி டிராக்டர் மீது மோதியதில் இரண்டு வாகனமும் நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்தன. இதில் டிராக்டரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் மேலும் 2 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டிராக்டரில் பயணித்த மேலும் 15 பேர் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு மோடி உண்மையை உரைக்க வேண்டும் - சோனியா வலியுறுத்தல்

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அடுத்த செய்தி