ஆப்நகரம்

மோசடி மன்னன் நிரவ் மோடி லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை தகவல்!

நிரவ் மோடி லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 19 May 2018, 10:24 pm
டெல்லி: நிரவ் மோடி லண்டனில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil Nirav Modi


மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி. இவர் தனது உறவினர் மெஹூல் சோக்சி உடன் சேர்ந்து கொண்டு, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 13,400 கோடி மோசடி செய்துள்ளார்.

பின்னர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். மேலும் அவரது தந்தை தீபக் மோடி, சகோதரர் நிஷால் மோடி, சகோதரி பூர்வி மேத்தா, அவரது கணவர் மாயங்க் மேத்தா ஆகியோரும் வெளிநாடு தப்பினர்.

இவர்கள் அனைவரும் 15 நாட்களுக்குள் மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக, மே மாதம் முதல் வாரத்தில் இ-மெயில் மூலம் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் நிரவ் மோடி தற்போது லண்டனில் இருப்பதாகவும், அவரது சகோதரர் நிஷால் மோடி பெல்ஜியத்தில் இருப்பதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Nirav Modi flees again, this time to London.

அடுத்த செய்தி