ஆப்நகரம்

இவங்கள என்கவுன்ட்டர்ல போட்ட மாதிரி அவங்களையும் போடுங்க : நிர்பயாவின் தாய் கண்ணீர் !!

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட இளம்பெண் நிர்பயாவின் தாய், மத்திய அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Samayam Tamil 7 Dec 2019, 12:38 am
தெலங்கானாவில் நடைபெற்றுள்ள என்கவுன்ட்டரை போல, தனது மகளின் துர்மரணத்துக்கு காரணமான காமுகர்களை இன்னமும் காலம் தாழ்த்தாமல் தூக்கிலிட வேண்டும் என்று நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, மத்திய அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Samayam Tamil நிர்பயாவின் தாயார் கண்ணீர் கோரிக்கை


தெலங்கானா மாநிலத்தில், கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த நான்கு பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தெலங்கானா போலீஸாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேசமயம் போலீஸாரின் என்கவுன்ட்டர் நடவடிக்கை விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு கருணை அளிக்கப்படாது: ராம்நாத் கோவிந்த் பேச்சு

இதனிடையே, தலைநகர் டெல்லியில், ஓடும் பேருந்தில் பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட நிர்பயா என்ற இளம் மருத்துவ மாணவியின் தாயார், தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து தமது கருத்தை தெரிவித்துள்ளார்.

"பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. தெலங்கானா போலீஸார் சிறப்பான பணியை செய்துள்ளனர். இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தை மேற்கொண்ட போலீஸார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.

எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த காமுகர்களையும் இனியும் தாமதிக்காமல் தூக்கிலிட வேண்டும். என் மகளின் மரணத்துக்கு நீதி வேண்டி கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வருகிறேன். எனது இந்த கோரிக்கை நிறைவேற மத்திய அரசும், நீதித் துறையும் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்" என, நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

அடுத்த செய்தி