ஆப்நகரம்

சுங்கச்சாவடிகளை நீக்க முடியாது, சுங்க கட்டணத்தை ரத்து செய்ய முடியாது- நிதின் கட்கரி

தரமான சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்காக மக்கள் சுங்க கட்டணம் செலுத்துவது அவசியமாகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Samayam Tamil 4 Jul 2018, 9:32 am
தரமான சாலைகளை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்காக மக்கள் சுங்க கட்டணம் செலுத்துவது அவசியமாகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Samayam Tamil pic
சுங்க வரியை ரத்து செய்ய முடியாது- நிதின் கட்கரி திட்டவட்டம்


மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் சுங்கச்சாவடிகள் எப்போதும் நீக்கப்படமாட்டாது என்று தெரிவித்தார்.

தரமான சாலைகள் பயன்படுத்தவும், அதற்கான சேவை தொடரவும் சுங்கச்சாவடிகள் அங்கேயே தான் இருக்கும் என்று தெரிவித்த அவர், அதை பயன்படுத்த மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்றார் நிதின் கட்கரி.

இந்தியாவில் ஏற்படும் விபத்துக்களை குறித்து பேசும் போது, நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும், பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

கடந்தாண்டில் இந்தியாவில் 4. 60 லட்சம் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 1.46 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். மஹராஷ்டிராவில் ராஜ் தாக்கரேயின் நவ நிர்மாண் சேனா போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் சுங்க கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றன என்று நிதின்கட்கரி தனது உரையில் குறிப்பிட்டார்.

அடுத்த செய்தி