ஆப்நகரம்

பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி!

அகமதுநகர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பட்டமளிப்பு விழாவின் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

Samayam Tamil 7 Dec 2018, 3:19 pm
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் மாவட்டம் ராஹூரியில் உள்ள மகாத்மா புலே கிரிஷி வித்யாபீத் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Samayam Tamil Nitin


நிகழ்ச்சியின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்டதால், மேடையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். இந்நிலையில் திடீரென கட்கரி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரை மகாராஷ்டிர ஆளுநர் சிவி ராவ் உள்ளிட்டோர் தாங்கிப் பிடித்தனர்.

உடனடியாக மருத்துவக் குழுவினர் சோதனை செய்தனர். அவர் நல்ல நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

தற்போது நலமுடன் இருப்பதாக பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்ட கட்கரி, ”சூடு மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு ஆகியவை காரணமாக மயங்கி விழுந்தேன். மருத்துவர்கள் சிகிச்சையால் தற்போது நல்ல நிலையில் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி