ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது: மத்திய அரசு

அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

TNN 23 Nov 2016, 12:55 pm
டெல்லி: அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்று மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no cash given for govt employees in upcoming salary day says central govt
அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது: மத்திய அரசு


டெல்லியில் மத்திய பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விவசாயிகள் தடையின்றி விவசாய கடன் பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்காக மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு, நபார்டு வங்கி மூலம் ரூ.21,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

ஆன்லைன் மூலம் பணபரிவர்த்தனை செய்வதை ஊக்கும் வகையில், டெபிட் கார்டுகளுக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரொக்கமாக வழங்கப்படாது என்றும், வழக்கம் போல் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுவரை 82,000 ஏ.டி.எம்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் அனைத்து ஏ.டி.எம்களும் மாற்றி அமைக்கப்படும் என்றும் சக்திகாந்த தாஸ் குறிப்பிட்டார்.

மொபைல் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அரசுத் துறைகளும் மின்னணு பரிவர்த்தனைகளையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சக்திகாந்த தாஸ் கூறினார்.

82,000 ATMs re-calibrated so far, only a matter of few days all the ATMs will be re-calibrated: Shaktikanta Das, Economic Affairs Secy.

அடுத்த செய்தி