நாடு முழுவதும் கோவாக்சின், கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. வரும் 10ஆம் தேதிக்குள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக எஸ்.சி.பி மருத்துவக் கல்லூரி, மாநகராட்சி ஆணையர், மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி, பொது சுகாதாரத்துறை அதிகாரி, மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஆட்சியர் பபானி சங்கர் சயானி கடிதம் எழுதியுள்ளார். அதில், மாநிலத்திலேயே கட்டாக் மாவட்டத்தில் தான் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக இருக்கிறது.
இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எனவே அனைத்து தரப்பினரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம்/படி/ஊக்கத்தொகை ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த கடிதம் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுய விருப்பத்தின் பேரில் தான் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மத்திய அரசே அறிவுறுத்தியுள்ளது. அப்படியிருக்கையில் கட்டாக் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டாக் மாவட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களில் 53.9 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால் மாநில சராசரி 69.6 சதவீதமாக இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் கீழ்நிலையில் இருக்கும் மாவட்டத்தில் ஒன்றாக கட்டாக் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 29,624 சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொண்ட நிலையில், 15,965 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். எனவே அனைத்து தரப்பினரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். குறிப்பாக சுகாதாரத்துறை ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அவர்களின் பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம்/படி/ஊக்கத்தொகை ஆகியவற்றை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த கடிதம் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுய விருப்பத்தின் பேரில் தான் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள மத்திய அரசே அறிவுறுத்தியுள்ளது. அப்படியிருக்கையில் கட்டாக் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டாக் மாவட்டத்தில் பதிவு செய்து கொண்டவர்களில் 53.9 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஆனால் மாநில சராசரி 69.6 சதவீதமாக இருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 30 மாவட்டங்களில் கீழ்நிலையில் இருக்கும் மாவட்டத்தில் ஒன்றாக கட்டாக் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கு 29,624 சுகாதாரத்துறை ஊழியர்கள் தடுப்பூசிக்காக பதிவு செய்து கொண்ட நிலையில், 15,965 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.