ஆப்நகரம்

பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் ரத்து; திடீர் முடிவுக்கு என்ன காரணம்?

அடுத்த சில நாட்களுக்கு பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Oct 2020, 4:54 pm
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கோயில்களில் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில் மத்திய அரசு அறிவித்த தளர்வுகளின்படி, கோயில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசுவாமி திருக்கோயிலில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
Samayam Tamil Padmanabhaswamy temple


உடனடியாக கோவிட்-19 கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டன. அனைவரும் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும். கோயில் வளாகம் கிருமி நாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்வதை உறுதிப்படுத்தும் விஷயங்களில் மும்முரம் காட்டப்பட்டது.

பக்தர்களின் தரிசன நேரம் குறைக்கப்பட்டது. போதிய சரீர இடைவெளியுடன் பக்தர்கள் வரிசையாக வந்து சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோயிலின் தூண்கள், சுவர்களை பக்தர்கள் யாரும் தொடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

17 வருஷம் ஆச்சு, கொடுக்க மாட்றாங்க மோடிஜி; வெடித்துச் சிதறிய லஞ்சப் புகார்!

இந்நிலையில் கோயில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை குருக்கள் பெரிய நம்பி உள்ளிட்ட நான்கு குருக்கள் அடங்குவர்.

ஊழியர்களுக்கு எப்படி வைரஸ் தொற்று ஏற்பட்டது குறித்து கோயில் அதிகாரிகளுக்கு விவரம் தெரியவில்லை. இதையடுத்து பத்மநாபசுவாமி கோயில் தந்திரி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில், வரும் 15ஆம் தேதி வரை பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதேசமயம் தினசரி பூஜைகள் தடையின்றி தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த செய்தி