ஆப்நகரம்

ரயில் பயணங்களில் பில் கொடுக்கலைனா? உணவு இலவசம்; பியூஸ் கோயல் அதிரடி!

பில் கொடுக்கவில்லை என்றால், உணவு இலவசம் என்ற கொள்கையை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

Samayam Tamil 20 Mar 2018, 4:03 pm
டெல்லி: பில் கொடுக்கவில்லை என்றால், உணவு இலவசம் என்ற கொள்கையை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
Samayam Tamil Piyush Goyal
பியூஸ் கோயல்


ரயில் பயணங்களின் போது வாங்கப்படும் உணவு, அதிக விலைக்கு விற்கப்படுவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. எனவே விலையை குறைக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துள்ளனர்.

இதற்கு புதிய முறை ஒன்றை அறிமுகம் செய்துள்ள பியூஸ் கோயல், பில் இல்லை என்றால் உணவை இலவசமாக உட்கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருவேளை பில் கொடுத்து, உணவு வாங்கினால் அதில் அதிக விலை குறிப்பிட்டிருந்தால், அதைக் கொண்டு கேட்டரிங் சேவை வழங்குநர் மீது புகார் தெரிவிக்க எளிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

சதாப்தி போன்ற ஏசி ரயில்களில் உணவுக்கும் சேர்த்து, டிக்கெட் கட்டணம் பெறப்படுகிறது. பிற ரயில்களில் தான் கேட்டரிங் சேவை வழங்குநர்கள் அதிக விலைக்கு உணவை விற்கின்றனர்.

புதிய திட்டம் தொடர்பான அறிவிப்பு பலகைகள், அனைத்து ரயில் நிலையங்களிலும் வரும் 31ஆம் தேதிக்குள் நிறுவ உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை இணையதள டிக்கெட்களிலும் அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தனிக் குழு ஒன்று அமைக்கப்படுகிறது. ஒருவேளை உணவு வழங்கப்படும் போது பில் புக் தட்டுப்பாடு என்றால், பயண நேரம் அல்லது உணவு சேவை வழங்கும் நேரம் முடிவடைவதற்குள் பில் அளித்தால் மட்டும் பணம் அளிக்கவும் என்று ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No food bill, no payment Railways targets overcharging.

அடுத்த செய்தி