ஆப்நகரம்

வாஜ்பாய் இதெல்லாம் விரும்பமாட்டார்....அவர் வழியை பின்பற்றுகிறோம்:சந்திரபாபு நாயுடு !

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விடுமுறை விரும்பமாட்டார், அதனால் அவரின் வழியை பின்பற்றி, இன்று விடுமுறை இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

Samayam Tamil 17 Aug 2018, 9:09 am
அமராவதி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விடுமுறை விரும்பமாட்டார், அதனால் அவரின் வழியை பின்பற்றி, இன்று விடுமுறை இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆனால் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 1


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, கடந்த 2009ல் மாரடைப்பு ஏற்பட்டது. பக்கவாதமும் ஏற்பட்டதால் சரியாக பேசமுடியாமல் போனது. இதனால், பல ஆண்டுகளாக பொது வெளியிலிருந்து ஒதுங்கி ஓய்வில் இருந்தார்.

கடந்த ஜூன் 11ஆம் தேதி சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவரின் ஒரு சிறுநீரகம் அகற்றப்பட்டது.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உட்பட் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாய் காலமானாதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவரின் இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது. இதையடுத்து இந்தியா முழுதும் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆந்திராவில் இல்லை.....
இந்நிலையில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு விடுமுறை விரும்பமாட்டார், அதனால் அவரின் வழியை பின்பற்றி, இன்று விடுமுறை இல்லை என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஆனால் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் விடுமுறை....
ஆனால் தெலுங்கானாவில் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி