ஆப்நகரம்

இனி ஹோம்வொர்க் கிடையாது: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பள்ளி மாணவர்களின் புத்தக சுமையைக் குறைக்க மத்திய கல்வி அமைச்சகம் புதிய கொள்கையை வகுத்துள்ளது.

Samayam Tamil 10 Dec 2020, 11:14 am
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசியக் கல்விக் கொள்கையை மையமாகக் கொண்டு, மத்திய கல்வி அமைச்சகம் பள்ளி பை கொள்கையை வகுத்துள்ளது.
Samayam Tamil school bag weight


பள்ளி மாணவர்கள் அதிக எடை கொண்ட புத்தக பையை தினமும் தூக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். இதனால் மாணவர்களின் உடல்நலமும் மன நலமும் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளிப் பை கொள்கையில் இப்பிரச்சினையை சரி செய்ய பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி புத்தகப்பையின் எடையை சீராக கண்காணிக்க வேண்டும், ஒவ்வொரு புத்தகத்தின் எடை அதன்மீது குறிப்பிடப்பட வேண்டும், பள்ளிப் பைகளின் அதிகபட்ச எடை மாணவரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு சிறையில் நடந்த பரீட்சை!

மேலும் பள்ளிகளில் லாக்கர்கள், பையின் எடையை சரிபார்க்க டிஜிட்டல் எடை இயந்திரம் இருக்க வேண்டும், மாணவர்கள் சக்கர கேரியர் அல்லது டிராலி பேக் கொண்டு வருவதை நிறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரையாண்டு தேர்வு ரத்து - பள்ளிகள் திறப்பு எப்போது?

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது, பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கட்டாய வசதிகள், மதிய உணவு போன்றவை போதுமானதாகவும், நல்ல தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிப் பையில் தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்வதைத் தவிர்ப்பதற்காக அல்லது அதன் அளவைக் குறைப்பதற்காக பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களும் எளிதாக அணுகக்கூடிய அளவில் நல்ல தரமான குடிநீரை வழங்குவது பள்ளி நிர்வாகத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்றும் பள்ளிப் பை கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி