ஆப்நகரம்

நீதிபதிகள் வாரநாட்களில் விடுப்பு எடுக்கக் கூடாது – ரஞ்சன் கோகாய்

நாடு முழுவதும் சுமாா் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றை குறைக்கும் நோக்கில் நீதிபதிகள் வார நாட்களில் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Oct 2018, 4:18 pm
வாரநாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளாா்.
Samayam Tamil Ranjan Kogoi


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அண்மையில் பொறுப்பேற்றாா். இந்நிலையில் உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றங்களில் சுமாா் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்குகள் தேக்கம் அடைவதை குறைக்கும் நோக்கில் ரஞ்சன் கோகாய் தலைமை நீதிபதிகள், கொலிஜியம் உறுப்பினா்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து நீதிபதி ரஞ்சன் கோகாய் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளாா். அதன்படி நீதிமன்ற வாரநாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக் கூடாது என்றும், அவசர சூழலில் மட்டுமே விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வேலை நாட்களில் நீதிபதிகள் கருத்தரங்கங்கள், அரசு விழாக்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி