ஆப்நகரம்

மீண்டும் ஊரடங்கா; முகக்கவசம் இன்னும் எத்தனை மாசத்திற்கு? வெளியான புது உத்தரவு!

அடுத்தகட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதா என்பது தொடர்பாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை இங்கே காணலாம்.

Samayam Tamil 20 Dec 2020, 3:15 pm
இந்தியாவில் அதிகப்படியான கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வந்தது. அதன்பிறகு படிப்படியாக பாதிப்புகள் குறைந்தன. தற்போது மும்பை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒட்டுமொத்த பாதிப்புகளில் 18,92,707 பேருடன் நாட்டிலேயே முதலிடத்தில் மகாராஷ்டிரா நீடிக்கிறது. தற்போது குறைந்த அளவிலான கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று புதிதாக 3,940 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Samayam Tamil Lockdown in Maharashtra


தற்போது 61,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 74 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்புகள் 48,648ஆக அதிகரித்துள்ளது. இம்மாநிலத்தில் குணமாகும் விகிதம் 94.14 சதவீதமாக இருக்கிறது. பலி விகிதம் 2.57 சதவீதமாக காணப்படுகிறது.

இத்தனை லட்சங்களா? செம மாஸாக ரெடியாகும் திருப்பதி கோயில்!

17,81,841 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன. எனவே அடுத்தகட்டமாக ஊரடங்கு அமலாகுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக இன்று (டிசம்பர் 20) பேசிய மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்திருக்கிறது. எனவே மகாராஷ்டிராவில் மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்தப்பட மாட்டாது. இரவு நேர ஊரடங்கிற்கும் வாய்ப்பில்லை.

வலிமை, அண்ணாத்த, கோப்ரா, மாஸ்டரையும் விட்டு வைக்காத கொரோனா

ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு முகக்கவசங்களின் பயன்பாடு கட்டாயமாக அமலில் இருக்கும். இதனை பொதுமக்கள் உணர்ந்து மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லாததால் பொதுமக்கள் பெரிதும் நிம்மதி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி