ஆப்நகரம்

என்கவுண்டரின் போது புர்ஹான் வானி குறித்து தகவல் இல்லை: மெகபூபா முப்தி

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் போது, அங்கிருந்தது புர்ஹான் வானி என்று அவர்களுக்கு தெரியவில்லை என்று முதல்வர் மெகபூபா தெரிவித்துள்ளார்.

TNN 29 Jul 2016, 5:01 am
ஜம்மு: காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டின் போது, அங்கிருந்தது புர்ஹான் வானி என அவர்களுக்கு தெரியவில்லை என்று முதல்வர் மெகபூபா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no message about burhan vani when encounter happen
என்கவுண்டரின் போது புர்ஹான் வானி குறித்து தகவல் இல்லை: மெகபூபா முப்தி


ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முகாஹிதீன் அமைப்பின் தளபதி உட்பட 3 பேர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. ஏராளமான துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 45க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

செல்போன், இணையச் சேவை, செய்தித்தாள் ஆகியவை முடக்கப்பட்டன. தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. போலீசார் பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி, அப்பாவி பொதுமக்களின் கண்களை பறித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கெமபூபா முபதி, பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய போது, புர்ஹான் வானி அங்கிருந்தது குறித்து எந்தவித தகவலும் தெரியாது என்று குறிப்பிட்டார். அவ்வாறு தெரிந்திருந்தால் தற்போதைய சூழல் ஏற்பட்டிருக்காது என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

அடுத்த செய்தி