ஆப்நகரம்

தப்பி ஓடி ஒளிய அவசியம் இல்லை - உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு மனுவில் ப.சிதம்பரம்!

தான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை என்று ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 21 Aug 2019, 12:55 pm
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மத்திய நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய நேரடி முதலீட்டை பெற்று தருவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.
Samayam Tamil P.Chidambaram


இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன. நேற்று ப.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது நடைபெற்ற விசாரணையில், டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Also Read: ஓடி, ஒளியும் ப.சிதம்பரம்; விடாமல் துரத்தும் சிபிஐ - சுப்பிரமணியன் சுவாமி டுவிட்!

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் நான் எங்கும் தப்பி ஓட வேண்டிய அவசியமில்லை.

Also Read: முன் ஜாமீன் மனு உடனடியாக விசாரிக்க மறுப்பு- ப.சிதம்பரத்திற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

முதல் தகவல் அறிக்கையில் எனது பெயர் குறிப்பிடப்படாத நிலையில், முன் ஜாமீன் மறுக்கப்பட்டது ஏன்? சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அழைத்த போதெல்லாம் விசாரணைக்கு நான் ஆஜராகி உள்ளேன்.

Also Read: ப.சிதம்பரத்தை இப்படி வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி அதிரடி டுவிட்!

நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய வேண்டிய அவசியம் இல்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் என் மீது, இதற்கு முன் எந்தவித குற்றச்சாட்டுகளும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி