ஆப்நகரம்

இந்த சான்றிதழ் இல்லன்னா பெட்ரோல் கிடையாது: மாநில அரசு அதிரடி உத்தரவு!

பெட்ரோல், டீசல் வாங்க கட்டுப்பாடு விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது

Samayam Tamil 1 Oct 2022, 6:55 pm
டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சினை நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil பெட்ரோல் டீசல்
பெட்ரோல் டீசல்


பெட்ரோல், டீசல் மூலம் இயங்கக்கூடிய வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு ஆகிய காற்றை மாசுபடுத்தக்கூடிய வாயுக்களின் அளவை கண்காணித்து மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

ஆனால், டெல்லியில் சுமார் 17 லட்சம் வாகனங்கள் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில போக்குவரத்துறை அண்மையில் தெரிவித்திருந்தது. மாசு கட்டுப்பாடு சான்றிதழை கட்டாயமாக்குவது குறித்து கடந்த மார்ச் மாதம் டெல்லி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பெரும்பாலான மக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்தியாவின் புதிய சகாப்தம் 5ஜி: பிரதமர் மோடி பேச்சு!
இந்த நிலையில், மாசு கட்டுப்பாடு சான்றிதழை பெற வேண்டியது அவசியம் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு அக்டோபர் 25ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாடு சான்றிதழ் இல்லாமலோ அல்லது புதுப்பிக்காமலோ வாகனம் ஓட்டினால் மோட்டார் வாகன சட்டத்தின்படி, ரூ.10,000 அபராதம் அல்லது ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி