ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசு திடீர் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், ஒமைக்ரான் வைரஸ் தொற்று புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வகை வைரஸ், தற்போது இந்தியாவிலும் கால் பதித்துள்ளது.
டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளதோடு தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில், தற்போதைக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால், நிலைமைக்கேற்ப டெல்லி அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும். உதாரணத்திற்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படும் 1,000 பேரில், 5 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இதே போல், 1,000 பேரில், 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், இரண்டாம் கட்ட அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 1,000 பேரில் 50 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், எச்சரிக்கையை குறிக்கும் வகையில் ரெட் அலர்ட் அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட மாநில அரசுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மேலும், கொரோனா தடுப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளதோடு தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
டெல்லியில், தற்போதைக்கு முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. கொரோனா பாதிப்புகள் அதிகரித்தால், நிலைமைக்கேற்ப டெல்லி அரசு கட்டுப்பாடுகளை விதிக்கும். உதாரணத்திற்கு, கொரோனா பரிசோதனை செய்யப்படும் 1,000 பேரில், 5 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், முதல் கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இதே போல், 1,000 பேரில், 10 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டால், இரண்டாம் கட்ட அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். 1,000 பேரில் 50 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டால், எச்சரிக்கையை குறிக்கும் வகையில் ரெட் அலர்ட் அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.