ஆப்நகரம்

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில்லை - கைதான மொசுருதீன் மனைவி பேட்டி

ஐஎஸ் அமைப்பிற்கும், தனது கணவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மேற்குவங்கத்தில் கைதான மொசுருதீன் மனைவி தெரிவித்துள்ளார்.

TNN 8 Jul 2016, 5:38 pm
திருப்பூர்: ஐஎஸ் அமைப்பிற்கும், தனது கணவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று மேற்குவங்கத்தில் கைதான மொசுருதீன் மனைவி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil no relation with isis for my husband mosurudeen wife speaks
ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில்லை - கைதான மொசுருதீன் மனைவி பேட்டி


மேற்குவங்க மாநிலம் புர்துவானில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கூறி, முகமது மொசுருதீன்(28) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் ஆண்டிப்பாளையத்தில் உள்ள கோழிப் பண்ணையில் பணிபுரிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மேற்குவங்க மாநில போலீசார், மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருப்பூரில் உள்ள அவரது மளிகை கடை மற்றும் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவருடைய அனைத்து ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரது மனைவி சாயிரா பானு(25), மொசுருதீனின் சகோதரர், நண்பர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஐஎஸ் அமைப்பிற்கும், தனது கணவருக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரது மனைவி கூறினார்.

இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதன்மூலம் அவர் சிரியாவில் உள்ளவர்களுடன் பேசிவந்ததாக கூறினர். மேலும் பேஸ்புக் மூலமாக ஐஎஸ் அமைப்புடன் தொடர்பிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த செய்தி