ஆப்நகரம்

இப்படியொரு அமைதியை பாத்திருக்க மாட்டீங்க- காஷ்மீரில் களைகட்டிய பக்ரீத் கொண்டாட்டம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்தவித பயங்கரவாத சம்பவங்களும் அரங்கேறாமல், பக்ரீத் பிரார்த்தனைகள் அமைதியான முறையில் நடந்து முடிந்தன.

Samayam Tamil 12 Aug 2019, 12:27 pm
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அறிவிப்பு வெளியிட்டது.
Samayam Tamil Kashmir Bakrid


இதையொட்டி அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பதற்றமான சூழல் தணியவே, படிப்படியாக ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டு வருகிறது.

Also Read: இஸ்ரோ நிறுவனர் விக்ரம் சாராபாய்க்கு கூகுள் டூடுல் வெளியிட்டு கெளரவம்!

இந்நிலையில் உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

பண்டிகை காலங்களில் காஷ்மீரில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்பட்ட வண்ணம் இருக்கின்றது. ஆனால் இன்று அமைதியான முறையில் பிரார்த்தனைகள் நடைபெற்று முடிந்தன.

Also Read: சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை, பிரதமர் மோடியுடன் சேர்ந்து பார்ப்பதற்கு அரிய வாய்ப்பு!

இதுகுறித்து போலீசார் கூறுகையில், அதிகப்படியான மக்கள் கூடுவதற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கின் எந்தவொரு பகுதியிலும் அனுமதி அளிக்கப்படவில்லை. மசூதிகளுக்கு சென்று வழிபட மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று நேற்றே தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் மாநில போலீசார் பதிவிட்டுள்ள டுவிட்டில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பிரார்த்தனைகள் அமைதியான முறையில் நடந்தன. இதுவரை எந்தவொரு அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.

மசூதிகளில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதேசமயம் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக, ஊரடங்கு உத்தரவு சற்றே தளர்த்தப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிர கண்காணிப்பை செலுத்தி வருகிறது.

Also Read: ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: பிரதமர் மோடி வாக்குறுதி

பொதுமக்களுக்கு தேவையான உணவு, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை அரசும் உறுதி செய்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி