ஆப்நகரம்

காற்று மாசுபாட்டால் ஆயுள் எல்லாம் குறையாது: மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர்

​இப்படி அளிக்கப்பட்ட பதிலுக்கு பதிலாக சமூக வலைதளங்களில் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் அரசியல் இதலைவர்களும் இதனை வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

Samayam Tamil 7 Dec 2019, 10:59 am
காற்று மாசுபாடு பிரச்சினை நாட்டின் பெரும் சவாலாக உருவெடுத்து வருகிறது.இது குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காட்டுவளம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்த பதில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.
Samayam Tamil prakash javadekar


அப்படி என்ன பதில் சொன்னார்?

காற்று மாசுபாடு பிரச்சினை இருக்கிறது உண்மைதான். ஆனால், அது வாழ்நாளைக் குறைக்கும் என்று இந்தியாவில் நடத்தப்பட்ட எந்த ஆய்வும் சொல்லவில்லை. மேலும் மாசுபாட்டை குறைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இப்படி அளிக்கப்பட்ட பதிலுக்கு பதிலாக சமூக வலைதளங்களில் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்களும் இதனை வெகுவாக விமர்சித்து வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்: தேர்தல் ஆணையம் கொடுத்த அடுத்த ஷாக்!


திருமணத்தை மீறிய உறவு: உதவச் சென்ற மூன்று போலி காவலர்கள்!

இது குறித்து கேட்டபோது “ காற்று மாசுபாட்டால் ஆயுள் குறையும் என்பதை எந்த ஆய்வும் நேரடியாக விளாக்கவல்லதல்ல. சொல்லப்போனால், காற்றுமாசுபாட்டின் வாயிலாக சூழலின் பெரும்பாலான விளைபொருட்கள், உயிர்பொருட்கள் கெட்டுப்போகும. அதன் விளைவாக மனித உடலுக்கு நோய்வாய்ப்படும் ஆபத்துகள் உள்ளன. இதன்வழியே மனிதனின் ஆயுட்காலம் குறையும். இதுதான் பொதுப்புரிதலே தவிர, நேரடியாக உங்கள் ஆயுளை அது குறைக்காது என்பது பொறுப்புள்ள பேச்சாக தெரியவில்லை” என்கிறார் சமூக ஆர்வலரான வழக்கறிஞர் ரேவதி.

அடுத்த செய்தி