ஆப்நகரம்

​ மத்திய அரசின் சாதனைக்கு நோபல் பாிசுதான் கொடுக்க வேண்டும் – ப.சிதம்பரம்

கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இதுதான் உங்கள் சாதனையா? மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பாிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 31 Aug 2017, 10:08 am
கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையில் இதுதான் உங்கள் சாதனையா? மத்திய அரசின் இந்த சாதனைக்கு நோபல் பாிசு கொடுக்கும் அளவிற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil nobel prise should be given to the central governments achievement
​ மத்திய அரசின் சாதனைக்கு நோபல் பாிசுதான் கொடுக்க வேண்டும் – ப.சிதம்பரம்


கடந்த நவம்பா் மாதம் திடீரென உயா் மதிப்பு ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று மத்திய அரசு தொிவித்தது. மேலும் மக்களிடம் உள்ள உயா் மதிப்பு ரூபாய் நோட்டுகளை மாற்ற கால அவகாசம் வழங்கப்பட்டது. இது கருப்பு பண ஒழிப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை மக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமா் மோடி நாட்டு மக்களுக்கு வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக சமீபத்தில் மத்திய ரிசா்வ் வங்கி 2016-17ம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னா் 1 சதவீத பழைய ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்பி வரவில்லை என்று தொிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடா்பாக கருத்து தொிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் கூறுகையில், 1 சதவீத ரூபாய் நோட்டுகள் மட்டுமே திரும்பி வரவில்லை என்று ரிசா்வ் வங்கி தொிவித்திருப்பது வெட்கக்கேடானது. இது தான் கருப்பு பண ஒழிப்பின் சாதனையா என்றும் கேள்வி எழுப்பினாா்.

மேலும் அவா் கூறுகையில், மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்ததுடன் 104 அப்பாவி பொதுமக்களை பலி கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் தோல்வி அடைந்ததற்காக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னால் இருக்கும் பொருளாதார நிபுணா்களுக்கு நோபல் பாிசு வழங்கும் அளவிற்கு அவா்களுக்கு தகுதி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பி வந்ததன் மூலம் 16 ஆயிரம் கோடி லாபம் என்று மத்திய அரசு தொிவித்துள்ளது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிட 21 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு செலவிட்டுள்ளது என்றும் ப. சிதம்பரம் தொிவித்தாா்.

அடுத்த செய்தி