ஆப்நகரம்

விஜய் மல்லையாவுக்கு 3வது முறையாக பிடிவாரண்ட்

பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் வெளிநாடு சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 3வது முறையாக மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் அனுப்பி உள்ளது.

TNN 16 Jul 2016, 4:46 pm
டெல்லி: பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி விட்டு, திருப்பி செலுத்தாமல் வெளிநாடு சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 3வது முறையாக மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் அனுப்பி உள்ளது.
Samayam Tamil nonbailable warrant to vijay mallaya
விஜய் மல்லையாவுக்கு 3வது முறையாக பிடிவாரண்ட்


பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து, ரூ.9,000 கோடி கடன் பெற்றார். ஆனால் இதை திருப்பி செலுத்தாமல் கடந்த மார்ச் மாதம் லண்டன் சென்று விட்டார். இதையடுத்து அவர் மீது மத்திய அமலாக்கப்பிரிவும், சிபிஐயும் பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைகளின் போது விஜய் மல்லையா ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் விஜய் மல்லையா ஆஜராகாததால், அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.

ஏற்கனவே இரண்டு முறை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மும்பை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

அடுத்த செய்தி