ஆப்நகரம்

சீன ராணுவம் நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை : பிரதமர் மோடி

எந்த விதமான ராணுவ நடவடிக்கைக்கும் இந்தியா தயார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jun 2020, 11:01 pm
நாட்டைப் பாதுகாக்கும் மிகச்சிறந்த வலிமை நமது இந்திய ராணுவத்திடம் உள்ளது என்றும், சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil all party meeting


லடாக் எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டினார் பிரதமர் நரேந்திரமோடி.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை. எதையும் எடுத்தும் செல்லவில்லை. நமது வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். நம் பாரத மாதாவுக்கு சவால் விடுத்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், இந்திய ராணுவத்திடம் ஒரே நேரத்தில் பல முனைகளுக்குச் செல்லும் ஆற்றல் உள்ளது என்றும், அவ்வளவு எளிதில் யாரும் இந்தியப் பகுதிக்குள் நுழைந்துவிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், “ஒரு அங்குலத்தைக் கூட சீனா கைப்பற்றவில்லை. மேலும், இதற்கு எதிர்வினையாக எந்த விதமான ராணுவ நடவடிக்கைக்கும் தயார் என்றும் பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, எல்லைப்பகுதிக்குள் யாரும் ஊடுருவவில்லை. ஆனால், நமது வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றால், உண்மையில் நடந்தது என்ன என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

அடுத்த செய்தி