ஆப்நகரம்

வடகிழக்கு மாநிலங்களில் பெருவெள்ளம், நிலச்சரிவு; 9 பேர் பலி, 1.6 லட்சம் பேர் பாதிப்பு!

கடந்த 48 மணி நேரமாக பெய்த கனமழையால் அசாம், மணிப்பூர், திரிபுராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Samayam Tamil 15 Jun 2018, 12:26 pm
அகர்தலா/இம்பால்/கவுஹாத்தி: கடந்த 48 மணி நேரமாக பெய்த கனமழையால் அசாம், மணிப்பூர், திரிபுராவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
Samayam Tamil North East Flood


திரிபுராவில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு 3 பேர் பலியாகினர். நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலியானார். கோவாய் மாவட்டத்தில் வெள்ளத்தில் விவசாயி மற்றும் இருவரை அடித்துச் சென்றது. இவர்களின் சடலங்கள் தெற்கு திரிபுரா மாவட்டத்தின் மனு ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

உனாகோடி, வடக்கு திரிபுரா, தலாய், கோவாய் மற்றும் கோமதி மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரங்களில் பலத்த மழை பெய்துள்ளது. முன்னதாக வங்கதேசத்தின் மிஸோரம் குன்றுகள், சிட்டகாங் குன்றுப் பகுதிகளில் பெருமழை பெய்தது. 13,000 மக்கள் 200 நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 50,000க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

மணிப்பூரில் ஒரு குழந்தை உட்பட இருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அசாமின் திமா ஹசாவோ மாவட்டம் மஹூர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர். கோபோகாகட் மாவட்டம் போகாகட்டில் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.

ஹோஜாய், கார்பி அங்லாங் கிழக்கு, கார்பி அங்லாங் மேற்கு, கோலாகாட், கரிம்கஞ்ச், ஹைலாகண்டி, கச்சாரி மாவட்டங்களில் 1.6 லட்ச்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரிம்கஞ்சில் மட்டும் 70,000 பேர் பாதிக்கப்பட்டனர்.

North East floods, landslides kill 9; 1.6 lakh affected in 7 districts of Assam.

அடுத்த செய்தி